பிரித்தானியாவில் சிறுமி கொடூரமாக படுகொலை - இளைஞர் ஒருவர் கைது
லிங்கன்ஷையரில் ஒன்பது வயதான லில்லியா வால்யூட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 வயதான சந்தேக நபர் சனிக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் போஸ்டன் சென்ட்ரல் பார்க் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உளவுத்துறை மற்றும் பல பொது உறுப்பினர்களால் வழங்கப்பட்ட தகவல்களின் மூலம் லில்லியாவின் மரணம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் நாங்கள் தேடவில்லை என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். எவ்வாறாயினும், லிங்கன்ஷயர் காவல்துறை அதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், "நகரத்தில் குறிப்பிடத்தக்க பொலிஸ் பிரசன்னம் தொடர்ந்து இருக்கும்" என்றும் கூறினார்.

தகவல் தெரிந்தவர்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என அதிகாரிகள் ஊக்கப்படுத்துகின்றனர். எங்கள் விசாரணையில் நாங்கள் மிகவும் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் என்று தலைமை கண்காணிப்பாளர் மார்ட்டின் பார்க்கர் கூறினார்.
முன்னதாக, லில்லியா கண்டுபிடிக்கப்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட சந்தேக நபரின் நான்கு சிசிடிவி படங்களை வெளியிட்டது, மேலும் அவரை அணுக வேண்டாம் என்றும் அவரைக் கண்டால் உடனடியாக 999 ஐ அழைக்கவும் எச்சரிக்கப்பட்டது.

வியாழன் மாலை 6.15 மணியளவில் Wormgate மற்றும் Fountain Lane பகுதியில் இந்த படங்கள் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வியாழன் மாலை 6.20 மணியளவில் ஃபவுண்டன் லேனில் படுகாயமடைந்த லில்லியா கண்டுபிடிக்கப்பட்டார்.
அந்த நேரத்தில் அவர்களின் தாய் பணிபுரிந்த அலுவலகத்திலிருந்து ஒரு புறத்தில் தெருவில் தனது தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri