மெல்கம் ரஞ்சித்தின் கருத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் காட்டம்
இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்க நடவடிக்கையெடுக்கும் போது மட்டும் மக்கள் கருத்துப் பெற வேண்டும் என்பது மெல்கம் ரஞ்சித்தின் ஒரு பக்க செயற்பாட்டினை காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (28.08.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுகநகரம் என்பனவற்றினை சீனாவுக்கு வழங்கியபோது வாய்திறக்காத பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தற்போது இலங்கை - இந்திய உறவு குறித்தும் பாலம் தொடர்பிலும் கருத்து வெளியிடுவது பக்கச்சார்பான அவரின் செயற்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.
போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை
எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் வடக்கில் மன்னாரிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கு நாங்கள் எமது முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம். அத்துடன் அனைவரும் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.
இந்த நாட்டில் மீண்டும் ஒரு இனக்கலவரம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சநிலை தமிழ் மக்கள் மத்தியில் உருவெடுத்திருந்தாலும் ஒவ்வொரு தேர்தல்கள் வரும் காலத்திலும் இனவாதத்தினை தூண்டிவிட்டு அரசியல்செய்வது இந்த நாட்டில் வழமையாகிவிட்டது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தமக்கு சாதமாக பயன்படுத்தி தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதை பூதாகரமாக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார்கள்.
தமிழர்கள் அடாத்தாக குடியேறவில்லை
எதிர்வரும் ஆண்டும் ஒரு தேர்தல் ஆண்டாகயிருக்கப்போகின்றது. இதனை மையமாகக்கொண்டு ஒரு சில இனவாதிகள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களை சுற்றிவளைக்க வேண்டும் என்றும், வடக்கு கிழக்கில் பௌத்தமதத்திற்கு எதிராக தமிழர்கள் செயற்படுகின்றார்கள் என்று இனவாதத்தினை வெளிக்கிளப்பி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் வீட்டுக்கு முன்பாகவும் இரண்டு தினங்களாக ஆர்ப்பாட்டங்களை செய்திருந்தார்கள் இதனை நாங்கள் வன்மையாக கண்டிகின்றோம்.
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில கூறுகின்றார் வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பில் சிங்களவர்களின் தலைநகரத்தில் தமிழர்களுக்கு என்ன வேலையென்று.
வடக்கு, கிழக்கில் நீங்கள் வந்து பகிரங்கமாக குடியேறுகின்றீர்கள், ஆனால் கொழும்பிலும் தெற்கிலும் தமிழர்கள் அடாத்தாக குடியேறவில்லை என்பதை உதய கம்பன்பில போன்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
நீங்களே கொழும்பு சிங்கள தலைநகரம் வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் என்றால் நாடாளுமன்றத்தில் நீங்களே வடக்கு கிழக்கினை பிரித்து எங்களை தனிநாடாக பிரகடனப்படுத்திவிட்டால் எல்லோருக்கும் அது வசதியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
