எஹலியகொட பியர் கொள்ளை! கவலை வெளியிட்டுள்ள மலிங்க
எஹலியகொட பகுதியில் மதுபானத்தை ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானமையும், அப்போது அங்கு கூடிய மக்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது.
பாரவூர்தி விபத்துக்குள்ளான பிறகு, அதில் சிதறிக் கிடந்த மதுபான போத்தல்களை எடுக்க மக்கள் விரைந்து சென்றமையை ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.
இது தொடர்பாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தனது முகநூலில் ஒரு குறிப்பை பதிவிட்டுள்ளார்.
225 திருடர்கள்
குறித்த குறிப்பில் "நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

225 திருடர்களால் இந்த நாடு தொலைந்து போனது என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது.
அவ்வப்போது 75 ஆண்டுகாலமாக நாட்டில் நிலவிய சாபம் பற்றிய உரத்த குரல்கள் ஒலித்தமையை என்னால் இன்னும் கேட்க முடிகிறது.
ஆனால் தற்போது அந்த அமைப்பு மாறிவிட்டதாகத் தெரிகிறது.
அதற்காக மூலதனமாக்கப்பட்ட கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தற்போது இல்லாமை ஆச்சரியமாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam