எஹலியகொட பியர் கொள்ளை! கவலை வெளியிட்டுள்ள மலிங்க
எஹலியகொட பகுதியில் மதுபானத்தை ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானமையும், அப்போது அங்கு கூடிய மக்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது.
பாரவூர்தி விபத்துக்குள்ளான பிறகு, அதில் சிதறிக் கிடந்த மதுபான போத்தல்களை எடுக்க மக்கள் விரைந்து சென்றமையை ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.
இது தொடர்பாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தனது முகநூலில் ஒரு குறிப்பை பதிவிட்டுள்ளார்.
225 திருடர்கள்
குறித்த குறிப்பில் "நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

225 திருடர்களால் இந்த நாடு தொலைந்து போனது என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது.
அவ்வப்போது 75 ஆண்டுகாலமாக நாட்டில் நிலவிய சாபம் பற்றிய உரத்த குரல்கள் ஒலித்தமையை என்னால் இன்னும் கேட்க முடிகிறது.
ஆனால் தற்போது அந்த அமைப்பு மாறிவிட்டதாகத் தெரிகிறது.
அதற்காக மூலதனமாக்கப்பட்ட கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தற்போது இல்லாமை ஆச்சரியமாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri