எஹலியகொட பியர் கொள்ளை! கவலை வெளியிட்டுள்ள மலிங்க
எஹலியகொட பகுதியில் மதுபானத்தை ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானமையும், அப்போது அங்கு கூடிய மக்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது.
பாரவூர்தி விபத்துக்குள்ளான பிறகு, அதில் சிதறிக் கிடந்த மதுபான போத்தல்களை எடுக்க மக்கள் விரைந்து சென்றமையை ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.
இது தொடர்பாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தனது முகநூலில் ஒரு குறிப்பை பதிவிட்டுள்ளார்.
225 திருடர்கள்
குறித்த குறிப்பில் "நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

225 திருடர்களால் இந்த நாடு தொலைந்து போனது என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது.
அவ்வப்போது 75 ஆண்டுகாலமாக நாட்டில் நிலவிய சாபம் பற்றிய உரத்த குரல்கள் ஒலித்தமையை என்னால் இன்னும் கேட்க முடிகிறது.
ஆனால் தற்போது அந்த அமைப்பு மாறிவிட்டதாகத் தெரிகிறது.
அதற்காக மூலதனமாக்கப்பட்ட கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தற்போது இல்லாமை ஆச்சரியமாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri