எஹலியகொட பியர் கொள்ளை! கவலை வெளியிட்டுள்ள மலிங்க
எஹலியகொட பகுதியில் மதுபானத்தை ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானமையும், அப்போது அங்கு கூடிய மக்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது.
பாரவூர்தி விபத்துக்குள்ளான பிறகு, அதில் சிதறிக் கிடந்த மதுபான போத்தல்களை எடுக்க மக்கள் விரைந்து சென்றமையை ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.
இது தொடர்பாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தனது முகநூலில் ஒரு குறிப்பை பதிவிட்டுள்ளார்.
225 திருடர்கள்
குறித்த குறிப்பில் "நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
225 திருடர்களால் இந்த நாடு தொலைந்து போனது என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது.
அவ்வப்போது 75 ஆண்டுகாலமாக நாட்டில் நிலவிய சாபம் பற்றிய உரத்த குரல்கள் ஒலித்தமையை என்னால் இன்னும் கேட்க முடிகிறது.
ஆனால் தற்போது அந்த அமைப்பு மாறிவிட்டதாகத் தெரிகிறது.
அதற்காக மூலதனமாக்கப்பட்ட கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தற்போது இல்லாமை ஆச்சரியமாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 14 மணி நேரம் முன்

ரோஹினியை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய விஜயா, என்ன விஷயம் தெரிந்தது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

அடிக்கடி வரும் உடல்நலப் பிரச்சனை, டாக்டர் கூறியதை கேட்டு ஷாக்கான ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ Cineulagam

இந்தியன் வங்கியின் IND Super 400 நாட்கள் FD திட்டத்தில் ரூ.4,44,444 முதலீடு செய்தால்.., எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
