உலகைக் கையகப்படுத்தும் டொனல்ட் ட்ரம்பின் பகிரங்க அறைகூவல்கள்:
கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவேன்.. பனாமா மீது படையெடுத்துச் சென்று பனாமாக் கால்வாயைக் கைப்பற்றுவேன்.. கிறின்லான்ட்டை விலைக்கு வாங்குவேன். அல்லது இராணுவத்தை அனுப்பிக் கைப்பற்றுவேன்.. பலஸ்தீனர்களை விரட்டிவிட்டு காசாவை கையகப்படுத்துவேன்... இப்படி டொனல்ட் ட்ரம்ப் மேற்கொண்டுவருகின்ற உரைகள், அறைகூவல்கள், ஒரு ஆபத்தான நிலையை நோக்கி இந்த உலகை இட்டுச்சென்றுகொண்டிருப்பதாகக் கூறுகின்றார்கள் ஆய்வாளர்கள்.
டொனல்ட் ட்ரம்பின் இதுபோன்ற பேச்சுக்களை நாம் எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்?
வெறும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு கடந்துசென்றுவிட வேண்டுமா, அல்லது கொஞ்சம் தீவிரமாகப் பார்க்கவேண்டுமா?
இந்த விடயம் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)