கோட்டாபயவின் அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்ட பிரதான எம்.பிக்கள்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் ஐந்தில் ஒரு பங்கு ராஜபக்சர்களை உள்ளடக்கி இருந்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம் என்றும், நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்ட முடியாமல் போனது என்றும் அவர் கூறியுள்ளார்.
கம்பஹா - திவுலபிட்டிய தொகுதியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
''எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் நாட்டை ஒப்படைத்தால், நாட்டின் எதிர்காலம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து எதுவும் பேச முடியாது.
90 சதவீத வெற்றி
இந்த தருணத்தில் நாட்டின் எதிர்காலத்தை கையளிக்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
மொட்டு கட்சியை ஆரம்பித்து அதனுடன் இணைந்து செயற்பட்டு உள்ளூராட்சித் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்களில் வெற்றி பெற்றோம்.

உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத வெற்றி பெற்றுள்ளோம். ஜனாதிபதித் தேர்தலில், அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் தேசியப் பாதுகாப்பில் மிகுந்த நம்பிக்கையுடன் வாக்களித்தனர்.
நாடாளுமன்றத்தில் எமக்கு மூன்றில் இரண்டு அதிகாரம் இருந்தது. அரசாங்கம் ஆரம்பமானபோது கோவிட் தொற்றுநோயால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
அரசாங்கம் என்ற வகையில் எங்களால் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை. நாங்கள் அன்று அமைச்சரவையில் இருந்தோம். கோட்டாபயவும் அங்கு இருந்தார்.
ஐந்தில் ஒரு பங்கு
பிரதமராக மகிந்த அங்கு இருந்தார். இதில் நிதி அமைச்சர் பசில். நாமல் ராஜபக்ச 05 அமைச்சர்களுடன் அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

அமைச்சர் சமலும் உடனிருந்தார். எங்கள் அமைச்சரவையில் ஐந்தில் ஒரு பங்கு ராஜபக்சர்களே. அந்த அமைச்சரவையில் நானும் இருந்தேன்.
அப்போது நாங்கள் சொன்னதை எங்கள் அரசு கேட்கவில்லை. எமது அரசாங்கம் கவிழ்ந்து.
அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டது. இதில் மற்ற காரணிகளும் இருந்தன. இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று ஜே.வி.பி கூறியது நினைவிருக்கலாம்.
அரசியல் ஸ்திரமற்ற தன்மை
எல்லோரையும் திருடன் என்று அழைத்தார்கள். மக்கள் மத்தியில் பொய்களை விதைத்தனர். நாட்டை வீதிக்கு இழுத்து அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கினர்.

நாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினோம். ஆனால் நாங்கள் அழைக்கப்பட்டோம்.
எதிர்க்கட்சித் தலைவரை நாட்டைப் பொறுப்பேற்கச் சொல்லுங்கள். நிபந்தனையின்றி உதவ தயார் என கூறினோம். ஏற்றுக்கொள்ள முடியாது என்று அனைவரும் கூறியபோது ரணில் மட்டும் ஏற்றுக்கொண்டார்." என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 18 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri