உக்ரைன் நீர்மின் நிலைய அணையில் குண்டுவெடிப்பு! பேரழிவு ஏற்படலாமென எச்சரிக்கை
உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் சோவியத் கால அணையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பினால், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நீர்மின் நிலைய அணை தகர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான காாணொளியினை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
இந்த அணை 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவினால் இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்திற்கும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள Zaporizhzhia அணுமின் நிலையத்திற்கும் தண்ணீர் வழங்குகின்றது.
ஷெல் தாக்குதல்
இதில் தற்போது குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளமையினால் அணை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த அணையின் சரிவு உள்ளூர் பகுதிக்கு பேரழிவை ஏற்படுத்தும் மற்றும் உக்ரைனின் போர் முயற்சியை பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த அணை தகர்க்கப்பட்டமைக்கு உக்ரைன் மற்றும் ரஷ்யா ஒருவரையொருவர் குற்றம்சாட்டியுள்ளதுடன், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் எனவும் ரஷ்ய அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஷெல் தாக்குதலினால் இந்த அணை அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Russian terrorists. The destruction of the Kakhovka hydroelectric power plant dam only confirms for the whole world that they must be expelled from every corner of Ukrainian land. Not a single meter should be left to them, because they use every meter for terror. It’s only… pic.twitter.com/ErBog1gRhH
— Володимир Зеленський (@ZelenskyyUa) June 6, 2023