கொலன்னாவ பகுதியில் பாரிய நெருக்கடியில் மக்கள்!
மெகொட கொலன்னாவ பகுதியில் வெள்ளம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மெகொட கொலன்னாவ பகுதியில் உள்ள மக்கள் அதிக நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை
சில வீடுகளில் துப்புரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும், வீடுகளை சுத்தம் செய்வதும் மிகவும் கடினமாகியுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பலர் இன்னும் அந்த வீடுகளுக்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெகொட கொலன்னாவ பகுதியில் சில இடங்களில், 15 அடிக்கும் அதிகமான உயரத்திற்கு வெள்ளம் தேங்கியுள்ளது.

மேலும் வீட்டிலுள்ள அனைத்து பொருட்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள்,வாகனங்கள் நீரிலி மூழ்கியுள்ளன.அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் உள்ள பொருட்கள் அழிவடைந்துள்ளன.