குடும்ப அரசியலை விரிவுப்படுத்தும் மைத்திரி! - மகனுக்கு பதவி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் (Maithripala Sirisena) தனது குடும்ப அரசியலை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, தனது மகன் தஹாம் சிறிசேனவை (Daham Sirisena) கட்சியின் முக்கிய பதவிக்கு மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட இளைஞர் அமைப்பின் தலைவராக அவரது தஹாம் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைவரும், தனது தந்தையான மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலுடன் தஹாம் சிறிசேன இந்தப் பதவிக்கு விண்ணப்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு பதவிக்கும் தஹாம் சிறிசேன தெரிவுசெய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
முன்னாள் ஜனாதிபதி தனது குடும்ப உறுப்பினர்கள் யாரையும் அரசியலுக்கு கொண்டு வரவில்லை என்று பலமுறை பகிரங்கமாக தெரிவித்திருந்தார். எனினும் தற்போது அவரின் மகனை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri