குடும்ப அரசியலை விரிவுப்படுத்தும் மைத்திரி! - மகனுக்கு பதவி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் (Maithripala Sirisena) தனது குடும்ப அரசியலை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, தனது மகன் தஹாம் சிறிசேனவை (Daham Sirisena) கட்சியின் முக்கிய பதவிக்கு மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட இளைஞர் அமைப்பின் தலைவராக அவரது தஹாம் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தலைவரும், தனது தந்தையான மைத்திரிபால சிறிசேனவின் ஒப்புதலுடன் தஹாம் சிறிசேன இந்தப் பதவிக்கு விண்ணப்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு பதவிக்கும் தஹாம் சிறிசேன தெரிவுசெய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
முன்னாள் ஜனாதிபதி தனது குடும்ப உறுப்பினர்கள் யாரையும் அரசியலுக்கு கொண்டு வரவில்லை என்று பலமுறை பகிரங்கமாக தெரிவித்திருந்தார். எனினும் தற்போது அவரின் மகனை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam