தேர்தல் ஒன்று மிகவும் அவசியம்! மைத்திரி வலியுறுத்தல்
நாட்டில் தேர்தல் ஒன்று மிகவும் அவசியம் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியினராக மக்களே உள்ளனர். ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி கட்சியினருக்கு இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் ஆணை
அத்துடன் மக்கள் ஆணை இன்றி எவரும் ஆட்சியமைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் வல்லமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே உண்டு என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
அத்துடன் நாட்டில் அடுத்து நடைபெறும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றி பெறும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே மக்கள் ஆணை வழங்கினர், அந்த ஆணையை பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் முடிவை எடுத்தோம் எனவும் அவர் கூறியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri
