யாழ். மீற்றர் வட்டி சம்பவம்: முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட ஐவர் கைது
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் முதன்மை சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வரும் பெப்ரவரி 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.
அவருடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட ஐவர் நேற்றிரவு (28.01.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று (28.01.2023) சரணடைந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சிகள்
மீற்றர் வட்டிக்கு பணம் பெற்றவர்களை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த காணொளிகள் தொடர்பில் வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது.
மீற்றர் வட்டிக்கு வழங்கிவிட்டு பணத்தை மீள வசூலிப்பதற்காக வர்த்தகர்களை அடித்துத் துன்புறுத்தும் இருபதற்கும் மேற்பட்ட காணொளிகள் பொலிஸ் உயர்மட்டத்துக்கு அனுப்பப்பட்டன.
அவற்றின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், சுன்னாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காரில் பயணித்தவரை வாகனத்தினால் மோதி கொலை செய்ய முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக பொலிஸில் சரணடைந்த ஜெகன் உள்ளிட்ட மூவருக்கும் மீற்றர் வட்டிக்கு பெற்றவர்களை அடித்துத் துன்புறுத்தும் சம்பவத்துடன் தொடர்புள்ளமை தெரியவந்துள்ளது.
மருதனார்மடம் சந்தைக்கு அண்மையாக உள்ள தோட்டக்காணிக்கு அழைத்தே பலரை அடித்துத் துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் உள்ளனர் என்பதும் விசாரணைகளில் கண்டறியப்பட்டள்ளது.
காணொளியில் முகக்கவசம் அணிந்து அடித்து துன்புறத்தும் நபர் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர்
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப்பின் குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
காணொளியில் தலைக்கவசம் அணிந்தவாறு தாக்குதல் நடத்துபவர் என அடையாளம் காணப்பட்டவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்தார்.
அவர் இன்று (28.01.2023) மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
இந்த நிலையில் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் முதன்மை சந்தேக நபருடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட ஐவரை நேற்றிரவு கைது செய்தனர்.
நாளாந்த மீற்றர் வட்டி
கைது செய்யப்பட்ட முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட நால்வர் நாளாந்த மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களுக்கு முச்சக்கர வண்டி சாரதி கூலிக்கு உதவியுள்ளார்.
நாளாந்த வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் ஒரு வாரத்துக்கு பணத்தையோ வட்டியையோ வழங்காவிடின் அவர்களை முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து அடித்து துன்புறுத்துவதை இந்தக் கும்பல் முன்னெடுத்துள்ளது.
சிறு முயற்சிகளில் ஈடுபடுவோர் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நாளாந்த வட்டிக்கு இந்தக் கும்பலிடம் பணத்தை வாங்கி பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் துன்புறுத்தப்பட்ட எவரும் முறைப்பாடு வழங்கவில்லை. கைது செய்யப்பட்ட அனைவரும் காணொளி ஆதரத்துடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
