கோட்டாபய உத்தரவிட்டிருந்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பர்! மகிந்தானந்த தகவல்
இலங்கை வரலாற்றில் கோட்டாபய போன்ற ஜனாதிபதி ஒருவர் கிடைத்ததில்லை என்றும், அவ்வாறான ஒருவர் பதவி விலகியமை தொடர்பில் என்றாவது ஒருநாள் மக்கள் சிந்திப்பார்கள் எனவும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரான மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியமை தொடர்பில் எப்போதாவது மக்கள் சிந்திப்பர். அவர் பதவி விலகுவதற்கு காரணமானவர்களும் அதனை சிந்திப்பர். எமது வரலாற்றில் இவ்வாறான ஜனாதிபதி ஒருவர் கிடைத்ததில்லை.
அன்று ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றும் போது, முப்படையினரும் அவருடனேயே இருந்தனர். அப்போது அவர் உத்தரவிட்டிருக்கலாம்.
அவ்வாறு அவர் அதனை செய்திருந்தால் அன்று போராட்டத்திற்கு வந்திருந்தவர்களில் குறைந்தது ஐநூறு, ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam