ஒரே நேரத்தில் ஏழு பௌத்த பிக்குகள் பலி! மகிந்தவின் உருக்கமான பதிவு
குருணாகலில் மெல்சிறிபுர பகுதியில் நேற்றைய தினம்(24) இரவு இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த ஏழு பௌத்த துறவிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,''நேற்று நடந்த இந்த துயர சம்பவத்தைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
துயர சம்பவ
அந்த எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு துறவிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் வெளிநாட்டு துறவிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியா, ரஷ்யா மற்றும் ருமேனியா நாடுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பசுமையான மற்றும் அமைதியான சூழலில் தியான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மறைந்த புத்த மகான்கள் தங்கள் ஆன்மீக இலக்குகளை அடைய நான் பிராத்திக்கிறேன்.
இதேவேளை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பௌத்த துறவிகள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri