தமிழ்க் கட்சிகளிடம் மகிந்த விடுத்துள்ள கோரிக்கை
ஜனாதிபதியுடனான பேச்சுக்களின் ஆரம்பத்திலேயே நிபந்தனைகளை முன்வைத்து, எச்சரிக்கைகளை விடுத்து அதைக் குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான பேச்சு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சர்வதேச சக்தி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் தீர்வைக் காணும் செயற்பாட்டில் இறங்கியுள்ளார்.
இதற்கு அரசின் பிரதான பங்காளிக் கட்சியான பொதுஜன பெரமுன முழு ஆதரவை வழங்குகின்றது.ஏனைய கட்சிகளும் ஆதரவு வழங்கும் நிலையில் உள்ளன.
இந்த நல்லதொரு சந்தர்ப்பத்தைக் குழப்பியடிக்க வேண்டாம் என்று தமிழ்க்
கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
சர்வதேச சக்திகளின் நிழ்ச்சி நிரலில் செயற்பட்டால் இங்கு எல்லாம் குழப்பத்தில் தான் முடியும் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri
