பசில் நாடாளுமன்றம் வருவது தொடர்பில் பிரதமர் மஹிந்த வெளியிட்ட தகவல்
எந்தவொரு நபர்களின் அவசரத்திற்காகவும் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வர முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பசிலை நாடாளுமன்றத்திற்கு வரவைப்பதற்கு எந்தவொரு அமைச்சரரோ, நாடாளுமன்ற உறுப்பினருக்கோ அவசியம் இருந்தாலும் அதற்காக நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சிலர் பசில் நாடாளுமன்றம் வரும் நாட்களை பெயரிடுகின்றனர். எனினும் இன்று அல்லது நாளை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராஜினா செய்த பின்னர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தை பிரதிநித்துவம் செய்வது தொடர்பில் உத்தியோகபூர்வமாக கூற முடியும்.
இது தொடர்பில் பசில் ராஜபக்ஷவுடன் எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும். அதன்பின்னரே நாடாளுமன்றம் வரும் திகதி தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும்.
இது தொடர்பில் பசில் ராஜபக்ஷவின் நிலையான தீர்மானத்தை அவர் வெளிப்படுத்தும் வரை என்னால் தீர்மானங்களை வெளிப்படுத்த முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 7 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
