ஐக்கிய தேசிய கட்சியின் யோசனையை ஆட்சேபித்த மகிந்த கட்சி
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான ஐக்கிய தேசியக்கட்சியின் (UNP) யோசனையை பொதுஜன பெரமுன (SLPP) ஆட்சேபித்துள்ளது.
இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார முன்வைத்த யோசனையை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆட்சேபித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது அடிப்படைக் கோட்பாடுகளை சீர்குலைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மை
எந்தவொரு ஜனநாயகத்திலும் தேர்தல்களை ஒத்திவைப்பது ஆரோக்கியமானது அல்ல. இதற்கு பதிலாக நாட்டின் ஸ்திரத்தன்மை மக்களின் விருப்பத்தின் மூலம் வர வேண்டும் என்றும் நாமல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் நீடிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) யோசனை ஒன்றை முன்வைத்திருந்தார்.

ஜனாதிபதியினதும் நாடாளுமன்றினதும் பதவிக் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதன் மூலம் நாட்டை பாதுகாக்க முடியும் என்பதுடன் அதுவே சரியான சந்தர்ப்பமாகும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam