தம்பி பசிலின் அறிவிப்பால் அண்ணன் மஹிந்தவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு 10 வருடங்கள் அந்த பதவியில் செயற்பட்டிருக்க வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போது நிதி அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இந்த யோசனைக்கமைய தங்கள் கட்சியில் உள்ள இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன தங்கள் ஓய்வூதியத்தை இழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் மறைந்த ஆர்.பிரேமதாஸவின் மனைவியான ஹேமா பிரேமதாஸவுக்கும் ஓய்வூதியம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam