அநுரவின் செயலால் மன வேதனையில் மகிந்த
சமகால அரசாங்கம் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் அரசியல் நல்ல நிலையில் இருப்பதாகவும், எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து தற்போதைய அரசாங்கத்தை அமைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பசில் ராஜபக்ச நாட்டிற்கு வருவது தொடர்பில் அவரிடமே தான் கேட்க வேண்டும். அவர் வரும் நாள் அல்லது செல்லும் நாள் தனக்குத் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மன வேதனையில் மகிந்த
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கண்டி பஹிரவகந்த ஸ்ரீ மகா போதி விகாரையில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.