மகிந்த மீது நாமல் குற்றச்சாட்டு - செய்திகளின் தொகுப்பு
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக தனது தந்தை உட்பட பல தலைவர்கள் வாக்குறுதியளித்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முடியும் என்ற போதிலும் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி மிகவும் தவறானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்புக்கு புறம்பாக தேர்தலை பிற்போடுவதாக இருந்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்திற்கு இல்லை எனவும் 45 வருடங்களுக்கு மேலாக அரசியலில் இருக்கும் தற்போதைய ஜனாதிபதி ஜனநாயகத்தை பாதுகாக்க பாடுபட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam
