அர்ஜுன் மகேந்திரனின் நியமனம் சட்ட ரீதியானது! ஷெஹான் சேமசிங்க
மத்திய வங்கியின் ஆளுனராக அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட்டமை சட்ட ரீதியானது என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டில் அர்ஜூன் மகேந்திரன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்தார்.
பிணை முறி மோசடிகள் தொடர்பிலான வழக்கு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசேகர எழுப்பிய வாய்மொழிமூல கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிணை முறி மோசடிகள் தொடர்பிலான வழக்குகள் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் மகேந்திரன் மோசடியில் ஈடுபட்டரா என்பது பற்றி பேசுவது பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.