சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஹோல் ஒப் பேம் விருதுக்கு தெரிவானார் மஹேல
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஹோல் ஒப் பேம் விருதுக்கு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன தெரிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச கிரிக்கட் பேரவை, கிரிக்கட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களை கௌரவப்படுத்தும் முகமாக 2009 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் ஹோல் ஒப் பேம் விருதை வழங்கி வருகிறது.
அதனடிப்படையில் இந்த வருடம் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்து வீரர் ஜெனெட் பிரிட்டின், தென் ஆப்பிரிக்காவின் ஷோன் பொலொக் ஆகியோர் தெரிவாகி உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிரிக்கட் அணியில் சாதித்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மற்றும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார சங்கக்கார ஆகியோர் ஏற்கனவே இந்த விருதைச் சொந்தமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
