சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஹோல் ஒப் பேம் விருதுக்கு தெரிவானார் மஹேல
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஹோல் ஒப் பேம் விருதுக்கு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன தெரிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச கிரிக்கட் பேரவை, கிரிக்கட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களை கௌரவப்படுத்தும் முகமாக 2009 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் ஹோல் ஒப் பேம் விருதை வழங்கி வருகிறது.
அதனடிப்படையில் இந்த வருடம் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்து வீரர் ஜெனெட் பிரிட்டின், தென் ஆப்பிரிக்காவின் ஷோன் பொலொக் ஆகியோர் தெரிவாகி உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிரிக்கட் அணியில் சாதித்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மற்றும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார சங்கக்கார ஆகியோர் ஏற்கனவே இந்த விருதைச் சொந்தமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam