சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஹோல் ஒப் பேம் விருதுக்கு தெரிவானார் மஹேல
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஹோல் ஒப் பேம் விருதுக்கு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன தெரிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச கிரிக்கட் பேரவை, கிரிக்கட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களை கௌரவப்படுத்தும் முகமாக 2009 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் ஹோல் ஒப் பேம் விருதை வழங்கி வருகிறது.
அதனடிப்படையில் இந்த வருடம் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்து வீரர் ஜெனெட் பிரிட்டின், தென் ஆப்பிரிக்காவின் ஷோன் பொலொக் ஆகியோர் தெரிவாகி உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிரிக்கட் அணியில் சாதித்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மற்றும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார சங்கக்கார ஆகியோர் ஏற்கனவே இந்த விருதைச் சொந்தமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan