சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஹோல் ஒப் பேம் விருதுக்கு தெரிவானார் மஹேல
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் ஹோல் ஒப் பேம் விருதுக்கு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன தெரிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச கிரிக்கட் பேரவை, கிரிக்கட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களை கௌரவப்படுத்தும் முகமாக 2009 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் ஹோல் ஒப் பேம் விருதை வழங்கி வருகிறது.
அதனடிப்படையில் இந்த வருடம் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்து வீரர் ஜெனெட் பிரிட்டின், தென் ஆப்பிரிக்காவின் ஷோன் பொலொக் ஆகியோர் தெரிவாகி உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிரிக்கட் அணியில் சாதித்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மற்றும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார சங்கக்கார ஆகியோர் ஏற்கனவே இந்த விருதைச் சொந்தமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam