தமிழர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய புத்தர்சிலை.. ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை குறித்து இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரரான கரகோட உயன்கொட மைத்ரி மூர்த்தி தேரர், ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
1951ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும், பௌத்த விவகாரங்கள் திணைக்களத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டதும், 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி வழங்கிய காணி உறுதிப்பத்திரம் மூலம் உரிமை உறுதிப்படுத்தப்பட்டதுமான ஒரு சட்டப்பூர்வ விகாரைக்கு எதிராகச் சில அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிக்குகள் மீது தாக்குதல்
இந்த அச்சுறுத்தலுக்கு நேற்று பொலிஸாரால் பிக்குகள் தாக்கப்பட்டமைக்கு வன்மையாக கண்டனம் தெரிவிப்பதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான பிக்கு தாக்கப்பட்டதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பொலிசின் இந்தச் செயல் அரசியலமைப்பின் 9 ஆவது சரத்தை அப்பட்டமாக மீறிய செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பொலிசின் சட்டவிரோத நடவடிக்கை குறித்து ஜனாதிபதி உடனடியாக விசாரணை மேற்கொள்வதுடன், குறித்த கட்டடத்தை அகற்ற வேண்டாம் என்றும், விகாரை மற்றும் பிக்குகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் மகாநாயக்க தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 13 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan