திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி தின முன்னேற்பாடு குறித்து ஆராய்வு (video)
மகா சிவராத்திரி தினத்தை பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி சிறப்பாக முன்னெடுக்கும் வகையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் மன்னார் அரசாங்க அதிபர் ஏ. ஸ்டன்லி டிமல் தலைமையில் இன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
முன் ஆயத்தங்கள்
குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபை செயலாளர் சிவசம்பு ராமகிருஷ்ணன் மற்றும் அதன் பிரதிநிதிகள், அரச தனியார் திணைக்களின் தலைவர்கள், பொலிஸ், இராணுவம் உயர் அதிகாரிகள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த காலங்களில் நோய் தொற்று காரணமாக சிவராத்திரி தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் யாத்திரிகர்கள் வருகை குறைக்கப்பட்டு பல சுகாதார கட்டுப்பாட்டுக்கு மத்தியில் சிவராத்திரி தினம் இடம்பெற்றது.

பல லட்சம் யாத்திரிகர்கள்
மன்னார் திருக்கேதீஸ்வர திருத்தலத்தில் சிவராத்திரி தினத்தில் பல லட்சம்
யாத்திரிகர்கள் வருகை தர உள்ள நிலையில் ஏற்பாடுகள் முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது முன் ஆயத்த நடவடிக்கை தொடர்பிலும், சுகாதாரம்,
போக்குவரத்து, பாதுகாப்பு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam