கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா..!

Anura Kumara Dissanayaka Cardinal Malcolm Ranjith
By Theepachelvan Nov 19, 2024 08:23 PM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: Theeba Selvan

ஶ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்க, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களை கடந்த காலத்தில் சந்தித்தார்.

இதன்போது ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி நேர்மையான விசாரணைகளை மேற்கொள்வார் என தாம் நம்புவதாக ரஞ்சித் ஆண்டகை கூறியிருந்தார். அத்துடன் விசாரணை நடத்தவும் மற்றும் உண்மையை வெளியே கொண்டுவரத் தேவையான அடித்தளத்தை தயார்செய்ய முடிந்த அனைத்தையும் செய்வதாக ஜனாதிபதி தனக்கு வாக்குறுதி அளித்திருந்ததாகவும் பேராயர் கூறியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். பேராயரின் கோரிக்கை மிகுந்த நியாயமும் அவசியமுமானது. அதேபோல ஈழத் தமிழ்  மக்களின் தாயகத்திலும் நடந்த படுகொலைகள் குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று நீதியை வழங்குவதும் அவசியமானது.

இனவழிப்பு போர்கள் 

நீதி என்பது கொச்சிக்கடை அந்தோனியாருக்கு ஒரு மாதிரியும், மன்னாரில் உள்ள மடுமாதாவுக்கு இன்னொரு மாதிரியும் அமைந்துவிட முடியாதல்லவா?

கோயில்கள் மீது வீசப்பட்ட குண்டுகள் கடந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் பெரும் இனவழிப்புப் போர்களுக்கு முகம் கொடுத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் ஈழத் தமிழ் மக்களின் தெய்வங்கள்மீதும் அந்தப் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது.

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா..! | Madu Matha Church Issue Article Lankasri

ஆலயங்கள் மீது குண்டுதாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. ஆலயங்கள்மீது விமானத்தாக்குதல்கள் பலவும் நடாத்தப்பட்டுள்ளன. ஈழத் தமிழ் மக்களுடன் அவர்களின் தெய்வங்களும் குண்டுத் தாக்குதல்களில் பலியாகவும் காயமடைந்தும் போன கதைகளை நாம் கொண்டிருக்கிறோம்.

தமிழர்களின் வீடுகள் குண்டுகளால் சல்லடையாக்கப்பட்டது போல ஆலயங்களின் கூரைகளும் சல்லடையாக்கப்பட்டுள்ளன. ஈழத் தமிழர்கள் கை, கால்களை இழந்தது போல தெய்வங்களின் அங்கங்களும் போரில் பறிக்கப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

தேவாலய படுகொலை 

நவாலி சென்பீற்றர் தேவாலயம், நந்தாவில் அம்மன் கோயில், மடுமாதா தேவாலயம் என்பன அரச படைகளின் போர்த் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க ஆலயங்கள் ஆகும். இங்கு மக்கள் தஞ்சமடைந்துள்ளார்கள் என்பது தெரிந்தும் போரை தவிர்க்க வேண்டிய ஆலயங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதுடன் ஈழத்தமிழ் மக்களின் குருதியால் இந்த ஆலயங்கள் நனைந்து போயுள்ளன.

நந்தாவில் அம்மன் ஆலயத்தில் ஈழத்தமிழ் மக்களின் சிதறிய உடல்கள் காணப்பட்ட காட்சிகளை இன்றளவும் மறந்துவிட முடியாது. மடுதேவாலயத்தில் கொல்லப்பட்ட சடலங்களை வைத்து குளறி அழும் ஈழச்சனங்களை இன்றளவும் மறந்துவிட முடியாது.

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா..! | Madu Matha Church Issue Article Lankasri

மடு எனும் வடு நம் நாட்காட்டிகள் ஈழச்சனங்களின் குருதியால் எழுதப்பட்டவை. நாள்தோறும் ஏதோவொரு படுகொலை நினைவில் வந்து விழுகிறது. நவம்பர் 20 மன்னார் மடு தேவாலயப்படுகொலை இடம்பெற்ற நாள். சிங்கள மக்களிலும் கணிசமான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களும் வணங்குகின்ற தேவாலயமாக மடு தேவாலயம் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனாலும் கூட இனப்படுகொலை என்று வந்துவிட்டால் எந்த தெய்வத்தையும் படுகொலை செய்ய இலங்கை அரசும் அதன் படைகளும் துணியும் என்பதற்கு சாட்சியாக மன்னார் மடுதேவாலயப் படுகொலைகள் வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன.

 போர் நடவடிக்கை 

மன்னார் மக்களின் வாழ்வில் மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழ மக்களின் வாழ்விலும் தீராத வடுவாக மடுத் தேவாலயப்படுகொலை பதிவாகியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மடுப்பிரதேசம் கிறிஸ்தவப் பண்பாடு பரவியிருக்கும் பகுதி. இலங்கையில் மாத்திரமின்றி உலக அளவிலும் பிரசித்தமானது மன்னார் மடு தேவாலயம்.

அத்துடன் ஈழத்தைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவர்கள் மாத்திரமின்றி சைவர்களும் நம்பிக்கையுடன் வணங்கும் ஆலயமாக மடு தேவாலயம் முக்கியத்துவம் பெறுகின்றது. அத்துடன் பௌத்தர்களும் கூட பெருமளவில் இந்த ஆலயத்தில் நம்பிக்கை கொண்டு வணங்குகின்றனர்.

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா..! | Madu Matha Church Issue Article Lankasri

வரலாறு முழுவதும் இந்த ஆலயம் போர் நடவடிக்கையின் பாதிப்புக்களுக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வந்திருக்கிறது. அடைக்கல மாதாவிடம் அடைக்கலம் புகுந்த மக்களுடன் மாதாமீதும் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதாமீது தொடுத்த போர் 1990ஆம் ஆண்டுக்குப் பிந்தைய காலத்தில் இலங்கை அரச படைகளின் போர் நடவடிக்கை காரணமாக மடுப் பிரதேசத்தில் தஞ்சம் அடைந்தார்கள். 1996களில் வடக்கில் சூழ்ந்த இனவழிப்புப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மன்னார் மடு வரையில் துரத்தயடிக்கப்பட்டனர். இக்கால கட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார் என பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் மடு தேவாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்தார்கள்.

இராணுவத்தினர் 

மடு தேவாலயச் சூழலே ஒரு அகதிகள் முகாம் போலக் காட்சி அளித்த காலம் அதுவாயிருந்தது. போரால் நலிவுற்ற மக்கள் மாதாவின் நிழலில் அடைக்கலம் புகுந்திருந்தனர். இந்த நிலையில், மார்ச் மாதம் 22 ஆம் திகதி 1999 ஆம் ஆண்டு ரணகோச என்ற ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் மன்னார் மடுப் பகுதியை கைப்பற்றும் போரை தொடங்கிய இலங்கை அரச படை. ஆனபோதும் அப்போருக்கு அன்றைய மன்னார் ஆயர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

புனித தலமான மடு தேவாலயம்மீது போர் தொடுப்பதை நிறுத்துமாறு அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தார் ஆயர். அக் கோரிக்கைக்கு செவிசாய்க்காத அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா மடுவை கைப்பற்றும் போரை தொடர்ந்து நடத்தி முடிப்பதில் கடும் தீவிரம் காட்டினார். மாதா மீது போர் தொடுக்கப்பட்டது.

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா..! | Madu Matha Church Issue Article Lankasri

நிர்க்கதியான மாதா பல்லின மக்களும் வணங்கும் மாதா தம்மை காப்பாற்றுவாள் என்று நம்பி தமிழ் மக்கள் மாதாவின் ஆலயச் சூழலில் தஞ்சம் புகுந்திருந்தனர். 1999ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதியன்று, மடு மாதா தேவாலயப் பகுதியை கைப்பற்றும் சண்டையை மூர்க்கமாக மேற்கொண்டனர் இலங்கை அரச படைகள்.

பாலம்பிட்டி - சின்னப் பண்டிவிரிச்சான் காடுகளின் ஊடாக மடுநோக்கி போர் எடுத்தது இலங்கை இராணுவம். இப் போர் நடவடிக்கை காரணமாக பாலம்பிட்டி, தட்சணாமருதமடுப் பகுதி மக்களும் இடம் பெயர்ந்து மடு தேவாலயம் நோக்கி வந்தனர். ஒரு கட்டத்தில் இலங்கை அரச படைகள் மடுதேவாலயத்தை ஆக்கிரமித்தனர். மடுதேவாலயத்தில் மக்கள் தஞ்சமடைந்திருந்ததைக் கண்ட இராணுவத்தினர் அவர்களை அங்கிருக்குமாறே சொல்லினர்.

துப்பாக்கிப் பிரயோகங்கள்

மக்கள் அங்கு தஞ்சமடைந்திருப்பதை இராணுவத்தினர் பண்டிவிரிச்சானில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினருக்கு அறிவித்திருக்கக்கூடும். ஆலய வளாகத்தில் வசித்த மக்களை ஆலய மண்டபங்களில் தஞ்சமடையுமாறு இராணுவத்தினர் கூறியிருந்தனர். இதனை நம்பி மக்களும் ஆலய மண்டபத்தில் தஞ்சம் புகுந்தனர்.

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா..! | Madu Matha Church Issue Article Lankasri

20இற்கு மேற்பட்ட கவச வாகனங்கள். எறிகணைகள் வந்து குவியத் தொடங்கின. துப்பாக்கிப் பிரயோகங்கள் இன்னொரு புறத்தில் சூழ்ந்தன. அன்றிரவு ஒன்பது மணிக்குப் பின்னர் பண்டிவிரிச்சான் இராணுவத் தளத்தில் இருந்தும் செல்கள் வந்து வீழத் துவங்கின. இரவு பதினொரு மணியாக இருந்தது. அப்பொழுதில் மக்கள் மீது பீரங்கிகள் திரும்பின.

குண்டுகள் மழையாய் பொழிந்தன. மக்கள் செய்வதறியாது துடித்தனர். காப்பாற்றுமாறு மாதாவை இறைஞ்சித் துடிதுடித்தனர். நிர்க்கதியான மாதாவும் மக்களின் துயர் துடைக்க முடியாத நிலையில் தவித்தாள். வீழ்த்தப்பட்ட மடுமாதா போர் உக்கிரமாயிற்று. இராணுவத்தின் எறிகணை இருதய ஆண்டவர் ஆலயம்மீது வீழ்ந்து வெடித்தது.

ஆலய மண்டபம் குருதி வெள்ளத்தில் நனைந்தது. உயிரை காக்க தஞ்சமடைந்த சனங்கள் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று முப்பத்து ஒருபேர் அவ்விடத்தில் இனக்கொலை செய்யப்பட்டனர். 13 சிறுவர்கள் உள்ளடங்க எல்லாமாக 44 பேர் கொல்லப்பட்டார்கள்.

வடக்கு கிழக்கு 

அவர்களின் உடல்கள் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மடுவில் விதைக்கப்பட்டது. தொடர்ந்து தாக்குதல்களை இராணுவத்தினர் விரிவுபடுத்தினர். அன்றிரவு மடு தேவாலயப் பகுதியை முழுமையாக இலங்கை அரச படைகள் கைப்பற்றியிருந்தன. வீழ்ந்தது மடு. வீழ்த்தப்பட்டாள் மடு மாதா. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எப்போதும் போர் அறத்துடனே செயற்பட்டுள்ளது.

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா..! | Madu Matha Church Issue Article Lankasri

அத்துடன் விடுதலைப் புலிகள் மடுப் பிரதேசத்தை மக்களின் நம்பிக்கையின் பொருட்டு போர் தவிர்ப்பு வலயமாகவும் புனித பிரதேசமாகவும் மதித்து வந்தனர். புலிகளற்ற மடு தேவாலயத்தில் நிராயுத பாணியாக தனித்திருந்த மக்களையே இராணுவத்தின் படுகொலை செய்தனர். ஒருவேளை அங்கு விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் தம் உறவுகள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

போர் தவிர்ப்பு வலயமாக நடைமுறைப்படுத்தி, விடுதலைப் புலிகள் தமது நடமாட்டத்தை தவிர்த்த தேவாலயப் பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர் பெரும் இராணுவ வெற்றியாக அதை சித்திரித்தனர். அத்துடன் அன்றைய சூழலில் தேர்தலில் மடுமாதாவை வீழ்த்திய செய்தியை சந்திரிக்கா வெற்றிச் செய்தியாக பயன்படுத்தினார். தெய்வங்கள்மீதும் பாரபட்சமா?

இத்தனைக்குப் பிறகும்கூட, தெய்வங்கள் மீதான போரும் பாரபட்சமும் இலங்கைத் தீவில் குறையாமல் இருப்பதுதான் இன்னமும் வேதனை தருகின்ற விடயம். இன்றைக்கும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வழிபாட்டு இடங்களை ஆக்கிரமிக்க வேண்டும் அழிக்க வேண்டும் என்றும் அதன் வரலாற்றை இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் மேற்கொள்ளப்படுகின்ற முனைப்புக்கள் பயங்கரமாக நீள்கின்றன.  

கொச்சிக்கடை அந்தோனியாருக்கு நீதி கோருபவர்கள் மடுமாதாவை மறந்துவிடுவது நியாயமா..! | Madu Matha Church Issue Article Lankasri

சைவ ஆலயங்கள் மீது தொல்லியல் திணைக்களமும் இராணுவமும் பௌத்த பிக்குகளும் ஒரு ஆக்கிரமிப்புப் போரை செய்து வருகின்றனர். இது புதிய அரசின் காலத்தில் நிறுத்தப்படுமா? உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சரியான வகையில் விசாரணை இடம்பெற்று நீதி முன்வைக்கப்படும் என்று கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நம்புகிறார்.

இவர், மடு தேவாலயத்திலும் நவாலி தேவாலயத்திலும் நடந்த இனப்படுகொலைகளுக்கு விசாரணைகளையும் நீதியையும் ஏன் கோரால் இருக்கின்றார்? தமிழர்களின் நிலத்தில் தேவாலயங்கள் மீதும் தெய்வங்கள் மீதும் இத்தகைய இனவழிப்புத் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும் என்பதை சொல்லுகிறார்களா?

ஆனால் தெய்வத்தின் முன்பாக நீதி ஒன்றாகவே இருக்க முடியும். அது வடக்கிற்கு ஒரு மாதிரியும் தெற்கிற்கு இன்னொரு மாதிரியும் இருப்பதில்லை. தெய்வங்கள் மத்தியிலும் இனங்கள் மத்தியிலும் இந்தப் பாரபட்ச அணுகுமுறைகள் நீண்டால் இந்த தீவில் ஏதோ ஒரு வகையில் துயரங்கள் அறுவடையாகிக் கொண்டே இருக்குமல்லவா? 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 19 November, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US