க.பொ.த சாதாரணதர பரீட்சையில் வடக்கிலுள்ள 12 கல்வி வலயங்களில் மடு முதலிடம்
கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சையில் வட மாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களில் மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயம் முதலாவது இடத்தை பெற்றுள்ளது.
வட மாகாண ரீதியில் முதலாவது இடத்தையும், தேசிய ரீதியில் 35வது இடத்தையும் மடு கல்வி வலயம் பெற்றுள்ளது.
மடு வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலனின் (K.Sathiyapalan) முயற்சியினாலும், மடு கல்வி வலயத்தில் உள்ள ஆசிரியர்களின் அயராத முயற்சியினாலும், அர்ப்பணிப்பான சேவையினாலும் குறித்த சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளதாக சாதனையாளர்களின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மடு கல்வி வலயத்தில் உள்ள மாணவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மாணவர்கள் உரிய போக்குவரத்து வசதி இல்லாமையினால் பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை, மேலதிக வகுப்புக்கு மாணவர்கள் செல்வதில் காணப்படும் இடர்கள் உள்ளிட்ட பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்த மடு கல்வி வலய மாணவர்கள் பாடசாலை கல்வியையும் பாடசாலை ஆசிரியர்களையும் மாத்திரமே நம்பி இருந்துள்ளனர்.
கடந்த வருடம் வடக்கு மாகாணத்தில் 5வது நிலையிலும் தேசிய ரீதியில் 73வது நிலையிலும் இவ்வலயம் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan