Gen-Z போராட்டம் எதிரொலியால் தலைமறைவான வெளிநாடொன்றின் ஜனாதிபதி
கிழக்கு ஆபிரிக்கா நாடான மடகஸ்கரின் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு ஆபிரிக்கா நாடான மடகஸ்கரில் ஜனாதிபதி Andry Rajoelina தலைமையிலான ஆட்சிக்கு எதிராக Gen-Z போராட்டம் நடைபெற்று வருகின்றது.
போராட்டம் தீவிரம்
தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக தொடங்கிய போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து மடகாஸ்கர் இராணுவத்தின் 'CAPSAT பிரிவு' முழு இராணுவத்தையும் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, Gen-Z போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், வர்த்தக சங்கங்கள் என பலரும் ஆதரவு அளித்ததால் போராட்டங்களால் நாடு ஸ்தம்பிதமடைந்துள்ளது.
ஜனாதிபதி தலைமறைவு
16 ஆண்டுகளில், ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தங்களை வளப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை, அதே நேரத்தில் மக்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், Gen-Z போராட்டம் தீவிரம் அடைந்ததால் ஜனாதிபதி Andry Rajoelina நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சி அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றும் முயற்சி நடந்து வருவதாக மடகாஸ்கர் அதிபர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக பொது இடங்களில் ஜனாதிபதி காணப்படாததால் அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
