கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் (PHOTOS)
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்களில் இன்றைய தினம் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமான முறையில் நடைபெற்றது.
நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள விசேட அதிரடி படையினர் தொடர்ச்சியான பல தடைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரன் தலைமையில்
உணர்வெழுச்சியுடள் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டு சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.













குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri