முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் (PHOTOS)
தமிழீழ விடுதலைப்போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு துயிலுமில்லங்களில் இன்றைய தினம்(27) இடம்பெற்றது.
படையினர் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்கள் தமது பிள்ளைகளை, உறவினர்களை நினைவில் இருத்தி துயிலுமில்லங்களுக்கு சென்று தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்,முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்,கோடாலிக்கல்லு மாவீரர் துயிலுமில்லம்,முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம்,தேராவில் மாவீரர் துயிலுமில்லம்,வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்,தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம்,இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம்,ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்,முல்லைத்தீவு நகர கடற்கரை ஆகிய பதினோரு துயிலுமில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
ஒவ்வொரு துயிலும் இல்லங்களிலும் மிக நெருக்கமான மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது. இதனைவிடவும் மக்கள் வீடுகளிலும்,வியாபார நிலையங்களிலும், ஆலயங்களிலும்,பொது இடங்களிலும் விளக்கேற்றி மாவீரரை நினைவேந்தியுள்ளனர்.












மீண்டும் பதின்மூன்றா....! 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவுக்குள் கால் வைத்தால் கைது, நாடுகடத்தல்தான்: சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு ரிஷி எச்சரிக்கை... News Lankasri

தொகுப்பாளினி டிடியின் மறுமணம் பற்றி முதன்முறையாக கூறிய அவரது அக்கா பிரியதர்ஷினி- என்ன கூறினார் தெரியுமா? Cineulagam

பெட்ரோல் நிலையத்தில் கிடந்த 'ஆண் குறி'! அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்.. பின்னர் தெரிய வந்த உண்மை News Lankasri
