முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் (PHOTOS)
தமிழீழ விடுதலைப்போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு துயிலுமில்லங்களில் இன்றைய தினம்(27) இடம்பெற்றது.
படையினர் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்கள் தமது பிள்ளைகளை, உறவினர்களை நினைவில் இருத்தி துயிலுமில்லங்களுக்கு சென்று தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்,முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்,கோடாலிக்கல்லு மாவீரர் துயிலுமில்லம்,முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம்,தேராவில் மாவீரர் துயிலுமில்லம்,வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்,தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம்,இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம்,ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்,முல்லைத்தீவு நகர கடற்கரை ஆகிய பதினோரு துயிலுமில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
ஒவ்வொரு துயிலும் இல்லங்களிலும் மிக நெருக்கமான மக்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது. இதனைவிடவும் மக்கள் வீடுகளிலும்,வியாபார நிலையங்களிலும், ஆலயங்களிலும்,பொது இடங்களிலும் விளக்கேற்றி மாவீரரை நினைவேந்தியுள்ளனர்.









தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 15 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan