இலங்கையில் அதிக ஆபத்தான பகுதிகள் எவை? வெளியானது அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
கடந்த 14 நாட்களுக்குள் கொவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ள அதிக ஆபத்துள்ள பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கோவிட் பரவலைக் குறிக்கும் அண்மைய வரைபடம், MOH என்ற மருத்துவ அதிகாரிகள் பகுதிகளை வகைப்படுத்தி வெளியிடப்பட்டது.
இதன்படி, முசலி, பலுகஸ்வெவ, சேருவில, செங்கலடி, தெற்கு காரைதீவு, மற்றும் லகுகல மருத்துவ அதிகாரிப் பிரிவுகள் குறைந்த கோவிட் தொற்றுக்கள் உள்ள பகுதிகளாகக் குறிக்கப்பட்டன.
அதேநேரம் மாந்தை கிழக்கு மற்றும் வெலிஓய பகுதிகள் ஒரு தொற்றுக்கூட பதிவு செய்யப்படாத பகுதிகளாக குறிக்கப்பட்டுள்ளன.
இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,