மத்திய கிழக்கில் தீவிர போர் பதற்றம்: எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்
உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் விலையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 111.5 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 109 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
மிக நெருக்கமான உச்சத்தால் தீவிர நிலை: தயவு செய்து அவதானமாக இருக்கவும் - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
இயற்கை எரிவாயுவின் விலை
எனினும் இயற்கை எரிவாயுவின் விலை 2.800 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்த அச்சமே இந்த விலை அதிகரிப்புக்கு பிரதான காரணமாக கருதப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த எரிசக்தி விலை மாற்றங்கள், இறக்குமதி நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பிராந்திய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் தாக்குதல்கள் - குவைத்தில் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்