விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த திட்டம்! ஹிந்து வெளியிட்ட செய்திக்கு பாதுகாப்பு அமைச்சு மறுப்பு
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து ஹிந்து ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்கு பாதுகாப்பு அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது. குறித்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றவை என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென” பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் மீண்டும் இலங்கையில் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
“அதிகரித்து வரும் வன்முறைகளிற்கு மத்தியில் இலங்கை அவசரகால நிலையை இரண்டு தடவை பிரகடனம் செய்துள்ள நிலையில் சர்வதேச தொடர்புகளை கொண்டுள்ள புலம்பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினர் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் படையினருக்கும் இடையிலான மோதலில் தங்கள் பிரசன்னத்தையும் வெளிப்படுத்த முயல்கின்றனர் என அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, குறித்த செய்தியினை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த செய்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இன உறவுகள் மேம்பட்டு வரும் இலங்கையின் இன்றைய சமூக சூழலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீள் உருவாக்கம் தொடர்பில் ஹிந்து வெளியிட்டுள்ள செய்தி மிகவும் கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மையானது எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
#TheHindu news on "#LTTE regrouping" is very disturbing in today's social context of SriLanka where race relations are improving. How authentic is this news?What's the intelligence source? Is it Indian/Foreign? #Indian @TheHindu & Authorities are requested give more explanations. pic.twitter.com/KPK9Z75ABm
— Mano Ganesan (@ManoGanesan) May 14, 2022
இதனிடையே வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் இழந்த அன்புக்குரியவர்களை இந்த வாரம் நினைவு கூற இருக்கும் நிலையில், இந்த செய்தி வந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் நேக்கில் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
Perfectly timed ! People in the N&E remember loved ones lost in #Mullivaikkal this week. Was this planted to stop them from remembering the dead ? Is this from @RW_UNPs @GotabayaR @SilvaShavendra or @KamalGunaratne s play book ? Also what’s your source @the_hindu ? https://t.co/WSdaCwpluf
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) May 14, 2022
இதேவேளை, ராஜபக்சர்களை பாதுகாப்பதற்காக மக்களின் கவனத்தை சிதறடிக்கும் நோக்கி இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
Is this a true news or planted one to protect Rajapakshas by distracting d attention & to justify GRs Draconian Emergency laws & Military Mania or to ignite ethnic tensions?
— Bimal Rathnayake (@BimalRathnayake) May 14, 2022
In Easter attack it's said that RAW informed it to SL intelligence & not to Media.
This time to Media! pic.twitter.com/CLXuTncMI0

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கையில் ‘தினமென்’ சதுக்கமும், ஐ. நா.வில் வீட்டோவும் 20 மணி நேரம் முன்

ஜேர்மனிக்கு பயணித்த கேரள இளம்பெண்ணை பாதி வழியில் திருப்பி அனுப்பிய விமான நிறுவனம்: காரணம் என்ன தெரியுமா? News Lankasri

ரஷ்யாவின் அடி மடியிலேயே கைவைத்த உக்ரைன்! சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சரை தட்டிதூக்கிய வீடியோ News Lankasri

38 வயதில் விளாடிமிர் புடின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண் இவ்வளவு சர்ச்சைக்கு பெயர் போனவரா? புதிய தகவல் News Lankasri

நீரிழிவு முதல் மாரடைப்பு, பக்கவாதம் வரை ஓட ஓட விரட்டியடிக்கும் டீ...எவ்வளவு குடிக்கனும் தெரியுமா? Manithan

சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்- செம வைரல். சூப்பர் ஜோடி Cineulagam

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் 3 நாள் பட்டய கிளப்பும் வசூல்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா? Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022