விடுதலைப்புலிகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசப்பட்டுள்ள முக்கிய விடயம்:ஸ்ரீதரன் பெருமிதம்
தமிழீழ விடுதலைப்புலிகளை ஒழுக்கமான அமைப்பு என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்தமையானது பெருமைக்குரிய விடயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் அடாவடித் தனம் பண்ணவில்லை, மது அருந்தவில்லை, இந்த உலகத்தில் போராடிய இயக்கங்களில் மிக ஒழுக்கமான இயக்கமாக அவர்கள் இருந்தார்கள் என எஸ்.பி திசாநாயக்க சபையில் தெரிவித்தமை தமிழர் சமூகத்திற்கு பெருமையான விடயமாகும்.
இது தொடர்பான எஸ்.ஸ்ரீதரனின் முழுமையான உரையை இந்த காணொளியில் காணலாம்,