புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளை பற்றி கதைக்க சென்ற போது நடந்த மோசமான சம்பவம் (Video)
ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பை விமர்சித்தவர்கள் அவர்களுடைய கருத்துக்களை ஏற்க மறுத்தவர்கள் இன்று விடுதலைப்புலிகளின் தலைவர்களை போன்று தங்களை நிர்வகித்து கொள்கிறார்கள் என மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குநரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,''போராட்ட காலத்தில் தமிழருடைய விடயத்தில் அக்கறை இல்லாதவர்கள், தமிழரின் விடயத்தை பற்றி கதைக்க போனவர்களுக்கு வீட்டில் இருந்த நாய்களை அவிழ்த்து விட்டு அவர்களை திருப்பி அனுப்பியவர்களும் விடுதலைப்புலிகள் பற்றி கதைப்பவர்கள் இங்கு வரக்கூடாது என சொன்னவர்கள் உள்ளனர்.
அவர்கள் இன்று பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச மேடைகளில் நின்று தமிழீழம் பெற்று தருவதாக கூறினால் அங்கு எவ்வளவு ஏமாற்று வேலைகள் நடக்கின்றது.
இருப்பினும் அவர்களை எதிர்த்து சிலர் செயற்படாததுக்கு காரணம் அவர்களுடைய பின்னணி பயங்கரமானது.
ஆகையால் பணத்துக்கு ஆசைபட்டு பணம் வசூலித்தவர்கள் நிச்சியமாக குழப்பவாதிகளாக தான் இருப்பார்கள்.''என கூறியுள்ளார்.