குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு நிதி அமைச்சின் அறிவிப்பு
குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, மேலதிகமாக 3 இலட்சம் குடும்பங்களை அஸ்வெசும திட்டத்திற்குள் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த மேன்முறையீடுகளை பரிசீலித்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டார்.
7 இலட்சம் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்து, 300,000 கூடுதல் குடும்பங்கள் அஸ்வெசும சமூக நலத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன்படி, அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தை தாண்டியுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு அடுத்த நெருக்கடி... இந்த நாட்டின் முடிவால் இந்தியாவுடன் கைகோர்க்கும் சீனா News Lankasri

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி News Lankasri

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri

நிபந்தனையுடன் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..லண்டனில் தெரிவித்த அதிகாரிகள் News Lankasri
