பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்
சூதாட்டத்தில் தோல்வியடைந்த பின்னர், வெற்றியாளருக்கு பணம் செலுத்துவதற்காக தனது காதலியின் சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய இளைஞனையும், அதனை வாங்கியவரையும் ஹொரணைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொடகவெல பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் மற்றும் 63 வயதுடைய தங்க வியாபாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொரணை, கனன்விலவைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் சந்தேக நபர் காதல் தொடர்பில் இருந்து வந்ததாகவும், அவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றதாகவும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
தங்க நகைகள்
இந்த நிலையில் வீட்டில் இருந்து இரண்டு மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க நகைகள் காணாமல் போனதாக இளம் பெண்ணின் தந்தை ஹொரணைப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததனை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.

அடிக்கடி வீட்டிற்குச் சென்றவர்கள் குறித்து முறைப்பாட்டாளரிடம் விசாரித்தபோது, மகளின் காதலன் பற்றிய தகவல்கள் தெரியவந்தன.
அடகு வைக்கப்பட்டு பணம்
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காதலனே இந்த திருட்டைச் செய்திருப்பது தெரியவந்தது. சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருடப்பட்ட தங்க நகைகள் கொடகவெல மற்றும் ஹொரணைப் பகுதிகளில் உள்ள பல அடகுக் கடைகளில் அடகு வைக்கப்பட்டு பணம் பெறப்பட்டதாகத் தெரியவந்தது.

திருடப்பட்ட தங்க நகைகளில் ஒரு தங்க சங்கிலி, காதணிகள், ஒரு வளையல், மோதிரங்கள் மற்றும் ஒரு பென்டன் ஆகியவை அடங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 12 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam