காதல் தோல்வியால் மாணவனின் விபரீத முடிவு
புத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் தூக்கிட்டுத் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காகக் காத்திருந்த, தனியார் வகுப்புக்களுக்குச் சென்று வந்த 17 வயதான வதிகே தசுன் மதுஷான் பெரேரா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் அதே பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
காதல் தோல்வி
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காதலி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட மனவேதனையிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மாணவனின் சடலம் மீதான மரண பரிசோதனைகள் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடத்தப்படவிருந்தன.
சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த மாரசிங்க தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.