அதிஷ்டலாப சீட்டுகளை இருமடங்கு விலை கொடுத்து வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி செய்தி
அதிஷ்டலாப சீட்டுகளில் வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் மேலும், அதிஷ்டலாப சீட்டின் விலையை இரட்டிப்பாக்க திறைசேரியின் அனுமதி கிடைத்துள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் அதிஷ்டலாப சீட்டின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது ஒரு அதிஷ்டலாப சீட்டு 20 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிகரிக்கும் பரிசுத் தொகை

இதன் விலை இருமடங்காக அதிகரிக்குமாயின் அதிஷ்டலாப சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூலை 6ஆம் திகதி முதல் உரிய விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும், அந்த விடயம் மீள பரிசீலிக்கப்பட உள்ளது.
எனவே விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் திகதி தொடர்பில் இந்த வாரத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 17 மணி நேரம் முன்
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan