அரசாங்கத்திற்கு எதிராக ஏராளமான விமர்சனங்கள்! - காரணத்தை கூறும் ரோஹித
அரசாங்கத்திற்கு எதிராக ஊடகங்களிலும், சமூகத்திலும் ஏராளமான விமர்சனங்கள் வெளியிடப்படுவதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வன் ரோஹித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பண்டுவஸ்நுவரவில் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“அரசாங்கத்திற்கு எதிராக இன்று ஏராளமான விமர்சனங்கள் வந்துள்ளன, ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒன்றும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்படுகின்றது.
ஊடகங்கள், சமூக ஊடகங்கள் தமக்கும் தமது குடும்பத்துக்கும் ஆட்சிக்கும் எதிராக சேறு பூசி வருகின்றன. நாம் எந்தவொரு வேலையும் செய்யவில்லை என திட்டுகின்றனர்.
நாம் வேலை செய்தாலும் அது வௌியில் கொண்டு செல்வது குறைவாக இருக்கிறது. அது ஒரு குறைபாடாக உள்ளது. அனால்தான் இந்த அரசாங்கம் பெயில் என கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் குறித்து முறையான தகவல்தொடர்பு இல்லாததே இதற்குக் காரணம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.