நுவரெலியாவில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்த லொறி - சிகிச்சையின் பின் சாரதி கைது
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில், சுமார் 100 அடி பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்த லொறியின் சாரதி ஹெரோயின் போதைப்பொருள் பாவனை செய்த நிலையில் வாகனத்தை இயக்கியதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்றுமுன்தினம்(25.04.2026) இடம்பெற்றுள்ளது.
போதைப் பொருள் பாவனை
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள், லிந்துலை ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பில், லொறி சாரதியிடம் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் மேற்கொண்ட வைத்திய பரிசோதனையில் சாரதி, ஹெரோயின் போதைப்பொருள் பாவனை செய்து வாகனத்தை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதி சிகிச்சையின் பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என லிந்துலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெல்லவாயாவிலிருந்து ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்திற்கு விறகு ஏற்றிச் சென்ற ஒரு லொறி பிரதான வீதியிலிருந்து விலகி சுமார் 100 அடி ஆழமுள்ள தேயிலைத் தோட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் லொறி இரண்டாக உடைந்து கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri