யாழில் எரிபொருளுக்காக நீண்டவரிசையில் மக்கள் காத்திருப்பு (Photos)
யாழ்ப்பாணம் - கஸ்தூரியார் வீதியில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மைக்காலமாக சரியான முறையில் மக்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதில் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே இன்று மக்கள் வாகனங்களுடன் நீண்ட வரிசைகளில் அதிக நேரமாக எரிபொருளுக்காகக் காத்திருக்கின்றனர்.
நேற்றையதினமும் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மக்கள் எரிபொருளுக்காகக் காத்திருந்தும் பெருமளவானோர் எரிபொருள் கிடைக்காமல் திரும்பி சென்றதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.