கருப்பின மாணவர் மீது லண்டன் பொலிஸார் கொடூர தாக்குதல்
கருப்பின மாணவர் ஒருவரை லண்டன் பொலிஸார் கொடூரமாக தாக்கும் காணொளியொன்று வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் கொள்ளை வழக்கு ஒன்றில் கருப்பினத்தை சேர்ந்த 14 வயதுடைய மாணவனிடம் பொலிஸார் அத்துமீறி சோதனை நடத்தியுள்ளனர்.
குரோய்டன் நகரில் பள்ளி வகுப்பை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த போதே மாணவனை பொலிஸார் மடக்கிபிடித்து விசாரணை நடத்தியுள்ளதுடன், இது தொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய பொது மக்களையும் பொலிஸார் விரட்டியடித்த காட்சியும் அந்த பதிவாகி பொது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.