தேர்தலுக்குப் பெருந்தொகை தேவையில்லை! எதிர்க்கட்சித் தலைவர்
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பெருந்தொகைப் பணம் தேவையில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் குறித்து தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தும் அரசாங்கம்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசாங்கத்தின் ஒரு நாள் செலவுக்கு சமமான தொகையே உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்குப் போதுமானது. ஆனால் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றது.
நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் அரசாங்கம் தேர்தலுக்கான நிதியை வழங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.