எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் இன்று வெளியான புதிய அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயு விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இன்றைய தினம் (29.10.2022) லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
இலங்கையை வந்தடைந்துள்ள கப்பல்
அவர் மேலும் கூறுகையில், இன்று காலை மற்றுமொரு எரிவாயு கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில் 3,700 மெற்றிக் தொன் எரிவாயு இறக்கும் பணி நாளைய தினம் (30.10.2022) ஆரம்பமாகும்.
எரிவாயு விலை குறைப்பு
இதேவேளை உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் தற்போது குறைவு ஏற்பட்டுள்ளது.
இதன் பயனை மக்களுக்கு வழங்கும் நோக்கில் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
you may like this video...

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
