எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு
பண்டிகைக் காலங்களில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும், நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள விநியோகத்தர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள சிலிண்டர்கள்

இதன்படி, நாட்டில் நேற்று முதல் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்திருப்பதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும், நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் நாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால், சந்தைக்கு எரிவாயு விநியோகிப்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவும் அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உரிய எரிவாயுக் கப்பல்கள் தற்போது நாட்டை வந்தடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri