அநுர அரசியல் ராஜபக்சர்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் சதி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வு பிரிவில் இன்று முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட, பெரமுன கட்சித் தலைமையை இழிவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்ட முறையில் பொய்யான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பிற மூத்த உறுப்பினர்களை குறிவைத்து சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ச்சியான அவதூறுப் பிரச்சாரம் நடத்தப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தவறான தகவல் பிரச்சாரம்
போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்ட நடவடிக்கைகளை இந்தத் தவறான தகவல் பிரச்சாரம் தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில குழுக்கள், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் பொய்யாக தொடர்புபடுத்தி, விசாரணைகளை அரசியல்மயமாக்க முயற்சிப்பதாக பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
போலி கணக்குகள்
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, சந்தேக நபரின் படத்தைப் பயன்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றச் செயல்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாக சித்தரிக்க முயற்சி நடப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

போலி கணக்குகள் மற்றும் பணம் செலுத்திய ஒன்லைன் பிரச்சாரங்கள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர்.
இது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri