புலம்பெயர்ந்தோருக்கெதிராக பிரித்தானியாவில் நடைமுறைக்கு வரும் புதிய சட்டம்
பிரித்தானியாவில் சட்டவிரோத புலம்பெயர்வோருக்கெதிரான புதிய சட்டங்களை மீண்டும் அறிமுகம் செய்ய உள்ளதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சட்டவிரோத புலம்பெயர்வோருக்கெதிரான புதிய கட்டுப்பாடுகள் குறித்த திட்டங்களை வெளியிடவுள்ளதாகவும், அதன்படி, சிறுபடகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்வோரின் புகலிடக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவிற்குள் அனுமதி மறுப்பு
மேலும், பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்கள் உடனடியாக ருவாண்டா அல்லது பாதுகாப்பான மற்றொரு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சட்ட விரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைவோர் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதுடன், வாழ்நாள் முழுவதும் அவர்கள் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிமுகம் செய்யவுள்ள சட்டங்களின் அடிப்படையில், பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்ட விரோத புலம்பெயர்வோரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுவதுடன், அவர்கள் பிரித்தானியாவுக்குள் திரும்ப வருவதற்கும், குடியுரிமை கோருவதற்கும், மறுகுடியமர்வதற்கும் விண்ணப்பிக்க கூட அனுமதி மறுக்க வழிவகை செய்ய இருப்பதாக அரசு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 23 மணி நேரம் முன்

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
