ரணிலின் கருத்தை நிராகரிக்கும் சுமந்திரன்(Video)
தமிழ் கட்சிகள் அரசாங்கத்துடன் பங்களிப்பை ஏற்படுத்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்கும் கூற்று பிழையானது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(02.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஜனாதிபதியோடு தமிழ் கட்சிகள் சேர்ந்து நிற்க வேண்டும் என அவர் விரும்புவது இனப்பிரச்சினைக்கு தீர்வளிக்கும் என கூறினால் அது நகைப்பிற்குரிய விடயமாகும்.
தமிழ் மக்களுடைய நிலைப்பாடு நன்றாகவே ஜனாதிபதிக்கு தெரியும். இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான எல்லா வழிமுறைகளும் உண்டு.
இனப்பிரச்சினைக்கான தீர்வொன்று முன்வைக்கப்பட்ட பிறகுதான் மத்திய அரசாங்கத்திலே தமிழ்கட்சிகளின் பங்களிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை காணலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவர் கூறிய விரிவான விடயங்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்.

ஈரானை தாக்கிய இஸ்ரேல்... அமெரிக்காவை எச்சரிக்க சுவிஸ் தூதரை அழைத்த ஈரான்: காரணம் என்ன? News Lankasri

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri
