இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை - இத்தாலி இடையில் உரிமங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்திற்கமைய, சாரதி அனுமதிப்பத்திர மாற்றத்திற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திர மாற்றத்திற்கான அதிகளவிலான கோரிக்கைகள் வரும் என எதிர்பார்க்கப்படுவதால், ஏப்ரல் 10 மற்றும் 15 ஆகிய திகதிகள் இதற்காக விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த 2 நாட்களில் ரோமிலுள்ள இலங்கை தூதரகத்தின் தூதரகப் பிரிவு சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்களை மட்டுமே கையாளும் என குறிப்பிடப்படுகின்றது.
அவசரத் தேவை
ஏனைய அனைத்து தூதரக சேவைகளும் இந்த இரண்டு தினங்களில் அவசரத் தேவைகளுக்காக மட்டுமே மட்டுப்படுத்தப்படும்.

விண்ணப்பங்களின் கோரிக்கையை திறம்பட நிர்வகிக்கும் நோக்கில் இந்தத் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தூதரகம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 15ஆம் திகதிக்குப் பிறகு வழமையான நடைமுறைகள் தொடரும் என்பதால் மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தங்கள் அனுமதிப்பத்திரங்களை மாற்றிக்கொள்ள முடியும் என தூதரகம் அறிவித்துள்ளது.
பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார் News Lankasri
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri