ஆசிரியர் மீது பாடசாலை மாணவன் தாக்குதல்! வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம்
யாழ்ப்பாணம் - ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தமக்கு இடமாற்றம் கோரி வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
யாழ்ப்பாணம் - ஒஸ்மானியா கல்லூரியில் நேற்றையதினம் (24.05.2023) பயிற்சி ஆசிரியரொருவர் மீது பாடசாலை மாணவன் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்நிலையில் யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் வடக்கு ஆளுநருக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளனர்.
ஆசிரியர் மீது தாக்குதல்
மேலும் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, யா/ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களாகிய நாம் தினம் தினம் இப்பாடசாலையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம்.
கடந்த (24.05.2023) தினமன்று யாழ்ப்பாண தேசியக் கல்வியற் கல்லூரியால் பயிற்சிக்காக வந்த ஆசிரியர் மீது தரம் 11 மாணவர்கள் தாக்குதலை ஏற்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு தொடர்ந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல்கள் இடம்பெறுவதனால் இப் பாடசாலையில் கடமையாற்றுவது அச்சுறுத்தலாகவே உள்ளது.எனவே எமக்கு வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அவ்வாறு இடமாற்றம் பெற்றுத் தராவிடின், உடல் ரீதியாக பாதிக்கப்படும் பட்சத்தில் நீங்களே பொறுப்பு கூறுபவர்களாக கருதப்படுவீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தின் பிரதிகள்
குறித்த கடிதத்தின் பிரதிகள் மனித உரிமை ஆணைக்குழு, இலங்கை ஆசிரியர் சேவைச்சங்கம், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் குறித்த பாடசாலையில் மாணவனொருவனால் பிரச்சினை ஏற்பட்டு ஆசிரியரொருவர் மீது குறித்த மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டிருந்த, நிலையில் இது இரண்டாவது சம்பவமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 6 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
