அம்பிட்டிய தேரரை கைது செய்யக்கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம்(Video)
“தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்தார்.
அம்பிட்டிய சுமன ரத்ன தேரரை கைது செய்யக்கோரி குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இன்றையதினம்(27.10.2023) எழுத்துமூல கடிதமொன்றை வழங்கிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை சுட்டிக்காட்டினார்.
மேலும், “அம்பிட்டிய தேரர் அவருக்கு இருக்கக்கூடிய தனிப்பட்ட பிரச்சினைகளை, பொதுப்பிரச்சினையாக மாற்றி இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
இவ்வாறான விடயங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.” என்றார்.
மேலும் தெரிவிக்கையில்,
சூடுபிடிக்கு தமிழ் அரசியல் களம்..! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுங்கள்: விடுக்கப்பட்ட கோரிக்கை
காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என சொன்ன ரஜினி.. இப்போது விஜய் பற்றி போட்ட பதிவை பாருங்க Cineulagam
3 எம்.எல்.ஏக்கள் ஒரே குடும்பத்தில்.,அரசியலில் கால்பதிக்கும் லாட்டரி மார்டின் குடும்பம் News Lankasri