பசறை தொலபாவத்தை மக்களுடன் லெட்சுமனார் சஞ்சய் கலந்துரையாடல்
ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமனார் சஞ்சய் தொலபாவத்தை மக்களை சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடல் இன்றையதினம் (04.07.2024) இடம்பெற்றுள்ளது.
வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினதும் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
இக்கலந்துரையாடலின் போது மலையக மக்கள் தற்போது பொருளாதார சூழ்நிலையில் சந்திக்கும் பிரச்சனைகள், நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடி, தற்போதுள்ள அரசாங்கம் செயற்படும் விதம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், சஜித் பிரேமதாஸ ஆட்சியினால் நாட்டில் ஏற்படுத்தப்படும் அபிவிருத்திகள் தொடர்பிலும் லெட்சுமனார் சஞ்சய் விளக்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |